search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகாசிவராத்திரியை முன்னிட்டு திருச்சி சிவன் கோவில்களில் நான்கு சாமங்களிலும் சிறப்பு பூஜைகள்-வழிபாடு
    X

    மகாசிவராத்திரியை முன்னிட்டு திருச்சி சிவன் கோவில்களில் நான்கு சாமங்களிலும் சிறப்பு பூஜைகள்-வழிபாடு

    • மகாசிவராத்திரியை முன்னிட்டு திருச்சி சிவன் கோவில்களில் நான்கு சாமங்களிலும் சிறப்பு பூஜைகள்-வழிபாடு நடைபெற்றது
    • திரளான பக்தர்கள் விடிய, விடிய தரிசனம்

    திருச்சி:

    மகாசிவராத்திரியை முன் னிட்டு சிவாலயங்களில் நேற்று நான்கு சாமங்களிலும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடை–பெற்றது. ஆண்டு–தோறும் மாசி மாதம் தேய்பிறை திரயோதசி மற்றும் சதுர்தசி சந்திக்கும் நாள் இரவு மகா சிவாராத்திரி விழா கொண்டாடப்பட்டு வரு–கிறது. சிவபெருமானுடைய வழி–பாடுகளிலேயே மிக உயர்ந்ததும், பூலோக வாழ்க் கைக்கு தேவையான––வற்றை மற்றும் அனைத்திற்கும் மேலான சிவகதி–யையும் அளிப்பது சிவ–ராத்திரி விரதமாகும். மகா–சிவராத்திரி அன்று சிவன் கோவில்களில் நான்கு சாமங்க–ளி–லும் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை–கள் நடைபெறும். அன்றி–ரவு முழுவதும் பக்தர்கள் கண்விழித்து சிவபூஜை நடத் துவர். சிவராத்திரியையொட்டி நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜெம்பு–கேஸ்வரர் அகிலாண்டேஸ் வரி அம்மன் கோவிலில் நேற்று இரவு 11 மணிக்கு நடைபெற்ற முதற்கால பூஜையின் போது 108 கலசா–பிஷேகம், பஞ்சகவ்யம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சோடசோபசார தீபங்கள் காட்டி பூஜைகள் நடத்தது. இன்று அதிகாலை 1 மணிக்கு நடந்த இரண்டாம் கால பூஜையின் போது 81 கலசங்கள், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் சிறப்பு அபி–ஷேகம் மற்றும் 7 அடுக்கு தீபம் காட்டி பூஜைகள் நடைபெற்றது. அதிகாலை 3 மணிக்கு நடந்த மூன்றாம் கால பூஜையின் போது 41 கலசங்கள், பழச்சாறு ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு 5 அடுக்கு தீபம் காட்டி பூஜைகள் நடைபெற்றது. மூன்றாம் கால பூஜையின் நிறைவில் பஞ்ச மூர்த்திகள் புறப்பட்டு கோவில் மூன்றாம் பிரகாரத்தில் வலம் வந்தனர். நிறைவாக காலை 5 மணிக்கு நான்காவது கால பூஜையின் போது 25 கலசங்கள், சந்தனம், பன்னீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் மற்றும் பஞ்சோபசார தீபங் கள் காட்டி பூஜைகள் நடை–பெற்றது. கோவில் கொடிமர மண்டபம் மற்றும் கண்ணுக்குட்டி மண்டபத்தில் நூற்றுக்க–ணக்கான சிவனடியார்கள் நான்கு சாமங்களிலும் சிவபூஜை நடத்தினர். இதில் விரும்புவோருக்கு சிவ தீட்சையளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கோவில் வளாகத்தில் உள்ள நவராத்திரி கலை விழா மண்டபத்தில் இரவு முழுவதும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

    Next Story
    ×