search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாம்பல் புதனை முன்னிட்டு திருச்சி தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி
    X

    சாம்பல் புதனை முன்னிட்டு திருச்சி தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி

    • சாம்பல் புதனை முன்னிட்டு திருச்சி தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது
    • சி.எஸ்.ஐ. திருச்சபைகளிலும் சிறப்பு ஆராதனை

    திருச்சி:

    உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் கடைபிடிக்கும் தவக்காலம் இன்று தொடங்கியது. தவக் காலத்தின் முதல் நாளான இன்று சாம்பல் புத–னாக அனுசரிக்கப்பட்டது.இதனை முன்னிட்டு திருச்சி மேலப்புதூர் தூய மரி–யன்னை பேரா–லயம், பாலக்கரை சகாய–மாதா தேவாலயம், மெயின் கார்டு கேட் லூர்து அன்னை ஆல–யம், புத்தூர் பாத்திமா கோவில், சிம்கோ மீட்டர் ஜெகன்மாதா கோவில், ஸ்ரீரங்கம் அமல ஆசிரம அந்தோணியார் கோவில், பொன்மலை சூசையப்பர் ஆலயம், எடத்தெரு பழைய கோவில்,கரு–மண்டபம் குணமளிக் கும் மாதா ஆலயம், காட்டூர் அந்தோணியார் ஆலயம், நெம்பர் 1 டோல்கேட் குழந்தை யேசு கோவில், கரு–மண்டபம் தூய யோவான் உள்ளிட்ட கத்தோலிக்க ஆலயங்களில் சிறப்பு திருப் பலி நடைபெற்றது.மேலும் திருச்சியில் உள்ள சி.எஸ்.ஐ. மற்றும் டி.இ.எல்.சி. ஆலயங்களிலும், பெந்த–கோஸ்தே ஜெப கூடங்க–ளில் சிறப்பு பிரார்த்தனை, பிரசங்கம் நடைபெற்றது. கத்தோலிக்க கோவில்களில் நடைபெற்ற சிறப்பு திருப்ப–லியில் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.சாம்பல் புதனை முன் னிட்டு திருச்சி புத்தூர் சி.எஸ்.ஐ. ஆல்செயிண்ட் சர்ச், திருச்சி ஜங்ஷன் புனித யோவான் தேவாலயம் ஆகியவற்றில் நடந்த சாம் பல் புதன் சிறப்பு பிரார்த் தனையில் திருச்சி-தஞ்சை திருமண்டல பேராயர் சந்திரசேகரன், குருத்துவ செயலர் சுதர்சன் மற்றும் ஆயர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.திருப்பலியின்போது கிறிஸ்தவர்கள் நெற்றியில் சாம்பல் பூசப்பட்டது. குருத் தோலைகளை எரித்து அதில் இருந்து கிடைத்த சாம்பலை அருட் தந்தையர்கள், கிறிஸ் தவர்கள் நெற்றியில் பூசி–னர். இதனைத் தொடர்ந்து 40 நாட்கள் கிறிஸ்தவ ஆலயங்களில் திருப்பலி மற்றும் சிலுவை வழிபாடு நடைபெறும். இந்த நாட்களில் கிறிஸ்தவர்கள் ஒருசந்தி எனும் விரதமிருந்து கடவுளை நினைத்து திருப்பலி மற்றும் பிரார்த்தனைகளில் ஈடுபடுவர்.ஏப்ரல் மாதம் 6-ந்தேதி பெரிய வியாழன் ஆகும். அன்று பாதம் கழுவுதல் நடைபெறும். அன்றைய இரவு முழுவதும் கிறிஸ்த–வர்கள் விழித்திருந்து நற் கருணை ஆராதனையில் கலந்து கொள்வார்கள். ஏசு உயிர்நீத்த நாளாக கடைபிடிக்கப்படும் பெரிய வெள்ளியான ஏப்ரல் 7-ந்தேதியை கிறிஸ்த–வர்கள் துக்க தினமாக அனுச–ரிப் பார்கள். அன்று மாலை நடைபெறும் சிறப்பு திருப்ப–லியில் பாடுபட்ட ஏசுவின் சொரூபத்திற்கு முத்தமிடும் பாத முத்தி நிகழ்வு நடை–பெறும்.8-ந்தேதி, சனிக்கிழமை இரவு 12 மணிக்கு ஈஸ்டர் திருப்பலி நடைபெறும். 9-ந்தேதியான ஞாயிற்றுக் கிழமை ஏசு உயிர்ப்பித்த நாளாக ஈஸ்டர் பண்டிகையை கிறிஸ்தவர்கள் கொண்டா–டுவர்.

    Next Story
    ×