search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காட்டுப்புத்தூரில் ரூ.78 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி - எம்.எல்.ஏ. தியாகராஜன் தொடங்கி வைத்தார்.
    X

    காட்டுப்புத்தூரில் ரூ.78 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி - எம்.எல்.ஏ. தியாகராஜன் தொடங்கி வைத்தார்.

    • மூன்று ஊராட்சிகளையும் இணைக்கும் பிரதான சாலை கடந்த 40 ஆண்டுகளாக சாலை அமைக்கும் பணி நடைபெறாமல் இருந்து வந்தது.
    • தற்பொழுது உள்ளாட்சி சாலை மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 78- லட்சம் செலவில் சாலை அமைக்க பட உள்ள்து

    திருச்சி :

    திருச்சி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றியம் ஸ்ரீ ராமசமுத்திரம் ஊராட்சி காமராஜ் மண்டபத்திலிருந்து சின்னப்பள்ளிபாளையம் ஊராட்சி, பெரியப் பெரியபாளையம் ஊராட்சி ஆகிய மூன்று ஊராட்சிகளையும் இணைக்கும் பிரதான சாலை கடந்த 40 ஆண்டுகளாக சாலை அமைக்கும் பணி நடைபெறாமல் இருந்து வந்தது.

    தற்பொழுது உள்ளாட்சி சாலை மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 78- லட்சம் செலவில் சாலை அமைக்க பூமி பூஜை முசிறி சட்டமன்ற உறுப்பினரும் திருச்சி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி ந.தியாகராஜன் தலைமையில் நடைப்பெற்றது.

    நிகழ்ச்சியில் தொட்டியம் ஊராட்சி ஒன்றிய துணை சேர்மன் பாபு என்கின்ற சத்தியமூர்த்தி தொட்டியம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) ம.மருததுரை காட்டுப்புத்தூர் பேரூராட்சித் தலைவர் சங்கீதாசுரேஷ், துணைத் தலைவர் சுதா சிவசெல்வராஜ்,

    தொட்டியம் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பி.தங்கவேல் கிழக்கு ஒன்றிய செயலாளர் பால ந.திருஞானம் காட்டுப்புத்தூர் நகர செயலாளர் கே.டி.எஸ். செல்வராஜ் தொட்டியம் பேரூராட்சி மன்றத் தலைவர் சரண்யாபிரபுசின்னப் பள்ளிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் அமுதவள்ளி பெருமாள் துணைத்தலைவர் கே.குமார் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் திமுக கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    இந்த சாலையால் காட்டுப்புத்தூர், உன்னியூர், ஸ்ரீராமசமுத்திரம் சின்னப்பள்ளிபாளையம் பெரியப்பள்ளிபாளையம் அதனை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள், விவசாய கூலி தொழிலாளர்கள் பயனடைவார்கள்.


    Next Story
    ×