என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருச்சி கல்லகத்தில் குப்பை தொட்டியில் கிடந்த குழந்தை மீட்பு
- திருச்சி கல்லகத்தில் குப்பை தொட்டியில் கிடந்த குழந்தை மீட்கபட்டது
- இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கல்லக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
டால்மியாபுரம்:
திருச்சி புள்ளம்பாடி ஊராட்சி கல்லகம் கிராமத்தில் உள்ள ஒரு குப்பை தொட்டியில் இருந்து குழந்தை அழும் குரல் கேட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கல்லக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் அங்கு வந்து நடத்திய விசாரணையில், பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை என்று தெரிய வந்தது. குப்பைத்தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட அந்த குழந்தை லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கல்லக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையில் குப்பைத்தொட்டியில் வீசி சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






