search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில் நாளை பவர்கட்
    X

    திருச்சியில் நாளை பவர்கட்

    • திருச்சி மாவட்டத்தில் நாளை மின்சாரம் நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது
    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிப்பு

    திருச்சி,

    திருச்சி கிழக்கு கோட்டத்துக்குட்பட்ட சிறுகமணி துணை மின் நிலையங்களில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே பெட்டவாய்த்தலை, பழங்காவேரி, வள்ளுவர்நகர், காமநாயக்கன்பாளையம், காவல்காரபாளையம், சிறுகமணி, பெருகமணி, அந்தநல்லூர், ஜீயபுரம் மெயின்ரோடு, அணலை, திருப்பராய்துறை, எலமனூர், கொடியாலம், அம்மன்குடி, முக்கொம்பு ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என்று திருச்சி கிழக்கு மின்வாரிய செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

    இதேபோல் லால்குடி தாலுகா வாளாடி துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    எனவே கீழப்பெருங்காவூர், வேலாயுதபுரம், தண்டாங்கோரை, வாளாடி, டி.வளவனூர், தர்மநாதபுரம், முத்துராஜபுரம், மேலப்பெருங்காவூர், சிறுமருதூர், மேலவாளாடி, புதுக்குடி, எசனைக்கோரை, அப்பாதுரை, கீழ்மாரிமங்கலம், அகலங்கநல்லூர், திருமங்கலம், மாந்துறை, நெய்குப்பை, ஆர்.வளவனூர், பல்லபுரம், புதூர் உத்தமனூர், வேளாண்கல்லூரி, ஆங்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று லால்குடி மின்வாரிய செயற்பொறியாளர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×