search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காலி மனை புதர்களில் விஷ ஜந்துக்கள்
    X

    காலி மனை புதர்களில் விஷ ஜந்துக்கள்

    • ஸ்ரீரங்கம் மங்கம்மாள் நகர் பகுதியில் காலி மனை புதர்களில் விஷ ஜந்துக்கள் அதிகரித்துள்ளது
    • ஜந்துக்கள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்

    திருச்சி,

    திருச்சி ஸ்ரீரங்கம் மங்க ம்மாள் நகர் மெயின் ரோட்டில் ஒன்றிரண்டு காலி மனைகள் உள்ளன.குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் இருக்கும் இந்த காலி மனைகள் மரம் செடி கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது.மேலும் காலி மனைகளில் குப்பைகள் மற்றும் உணவு கழிவுகளை போட்டு செல்வ தால் அந்தப் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு ள்ளது.மேலும் காலி மனைகளில் பாம்பு போன்ற விஷ ஜந்து க்களின் நடமாட்டம் உள்ள தால் மக்கள் அச்சமடை ந்துள்ளனர்.இதுகுறித்து ஸ்ரீரங்கம் நகர நலச் சங்க மக்கள் செய்தி தொடர்பாளர் ரோட்டேரியன் கே. ஸ்ரீனிவா சன் கூறும்போது,இந்த பகுதியில் சமீப காலமாக குரங்கு மற்றும் நாய் தொல்லை அதிகரித்து ள்ளது. மயில்கள் அதிக அளவு நடமாடுகின்றன. இவை சில நேரங்களில் விஷ ஜந்துக்களை பிடித்து குடியிருப்பு பகுதிகளில் போட்டு விட்டு செல்கிறது. காலி மனைகளில் மழை நீர் தேங்குவதால் கொசு தொல்லையும் அதிகரித்து ள்ளது.ஆகவே காலி மனைகளை சுத்தப்படுத்தி பொதுமக்க ளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்தை கேட்டுக்கொ ள்கிறோம்.காலி மனைகளில் குப்பை போட்டு செல்ப வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காலி மனைகளை சுத்தமாக பராமரிக்க அதன் உரிமை யாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும் என்றார்.

    Next Story
    ×