search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது-அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. பேச்சு
    X

    தி.மு.க. ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது-அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. பேச்சு

    • தி.மு.க. அரசு மீது தமிழக மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு விட்டதாக திருச்சியில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் முன்னாள் எம்.பி. பேசினார்
    • வெற்றிடத்தை எடப்பாடியார் வெற்றியின் இடமாக மாற்றிக் காட்டினார். எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த காலத்தில் பொதுமக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செய்து கொடுத்தார்

    திருச்சி:

    அ.தி.மு.க. சார்பில் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருச்சி உறையூர் குறத்தெருவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பகுதி செயலாளர் பூபதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவைத் தலைவர் அய்யப்பன், ஆவின் சேர்மனும், மாவட்ட மாணவரணி செயலாளருமான கார்த்திகேயன்,

    முன்னாள் அமைச்சர் நல்லுசாமி, நிர்வாகிகள் கே.சி.பரமசிவம், மாவட்ட இணைச் செயலாளர் ஜாக்குலின், மாவட்டத் துணைச் செயலாளர்கள் வனிதா, பத்மநாதன், வெல்லமண்டி பெருமாள், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளர் முத்துக்குமார், தென்னூர் அப்பாஸ், கருமண்டபம் நடராஜன், ஜோசப் ஜெரால்டு, அழகரசன் விஜய், முன்னாள் துணை மேயர் மரியம் ஆசிக்,

    பகுதி பொருளாளர் சந்திரசேகர், பகுதி அவைத்தலைவர் எம்.ஜே.பி.வெஸ்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் கோவிந்தசாமி, மருத்துவர் அணி பொருளாளர் வடிவேல், தலைமை கழக பேச்சாளர்கள் பாலு, ராஜமாணிக்கம் ஆகியோர் பேசினார்கள்.

    கூட்டத்தில் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில இணை செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் பேசும்போது, திருச்சி மாநகரில் உள்ள சாலைகள் மோசமாக இருக்கின்றன. அ.தி.மு.க. ஆட்சியில் தூய்மையான மாநகரப் பட்டியலில் திருச்சி ஆறாவது இடத்துக்குள் இருந்தது.

    ஆனால் இன்றைக்கு 158-வது இடத்துக்கு சென்று இருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் மின் கட்டணம் 150 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆகவே வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் தி.மு.க.விற்கு ஷாக் கொடுத்து 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்வார்கள் என்று பேசினார்.

    முன்னாள் எம்.பி.யும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான டி.ரத்தினவேல் பேசும்போது, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் வெற்றிடம் ஏற்பட்டதாக சொன்னார்கள். ஆனால் அதனை எடப்பாடியார் வெற்றியின் இடமாக மாற்றிக் காட்டினார். எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த காலத்தில் பொதுமக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செய்து கொடுத்தார்.

    தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு கெட்டு கிடக்கிறது. விலைவாசி, மின் கட்டணம், சொத்து வரி உயர்ந்துள்ளது. மக்கள் இப்பொழுது அ.தி.மு.க. ஆட்சியின் மகத்துவத்தை உணர ஆரம்பித்து உள்ளார்கள்.

    தி.மு.க. அரசு மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு உள்ளது. போகப்போக வெறுப்பு மேலும் அதிகரிக்கும். சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் அ.தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வருவார் என்றார்.

    கூட்டத்தில் பகுதி செயலாளர்கள் அன்பழகன், சுரேஷ்குப்தா, எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, கலைவாணன், கவுன்சிலர்கள் அரவிந்தன், அம்பிகாபதி, தலைமை கழக பேச்சாளர் ஆரி, வட்டச் செயலாளர்கள் என்.டி.மலையப்பன், என்ஜினீயர் ராஜா, காசிப்பாளையம் சுரேஷ், கட்பீஸ் ரமேஷ், தர்கா காஜா, பொன்.அகிலாண்டம், வசந்தம் செல்வமணி, முத்தையன், என்ஜினீயர் ரமேஷ், புத்தூர் சதீஷ்குமார், விஜயன், ரமணிலால், மாணவரணி ராஜசேகர், குமார், கே.டி.அன்புரோஸ், வண்ணாரப்பேட்டை ராஜன், கே.டி.ஏ.ஆனந்தராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×