search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி அருகே  -  காரின் டயர் வெடித்து பைக்கில் சென்றவர் பலி
    X

    திருச்சி அருகே - காரின் டயர் வெடித்து பைக்கில் சென்றவர் பலி

    • இவர் பெயிண்டிங் வேலை செய்து வந்தார்.
    • பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்

    டால்மியாபுரம்

    திருச்சி மாவட்டம் கல்லக்குடி கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் தயாளன் மகன் அகஸ்டின்பிரபாகரன் (வயது 38). இவர் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் அகஸ்டின்பிரபாகரன் வடுகர்பேட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ராஜா டாக்கீஸ் பேருந்து நிலைய பாலம் அருகே சென்ற போது, அவர் பின்னால் வந்த காரின் டயர் வெடித்து, இவர் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அகஸ்டின்பிரபாகரன் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக கல்லக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×