search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துறையூரில் - தேசிய நூலக வார விழா
    X

    துறையூரில் - தேசிய நூலக வார விழா

    • திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் செங்காட்டுப்பட்டியில் நூலக வாசகர் வட்டத்தில் 56- வது தேசிய நூலக வார விழா நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை போட்டி, ஓவிய போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிக்கப்பட்டது.

    துறையூர்

    திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் செங்காட்டுப்பட்டியில் நூலக வாசகர் வட்டத்தில் 56- வது தேசிய நூலக வார விழா நடைபெற்றது.

    செங்காட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கற்பகம் தலைமை வகித்தார். வாசகர் வட்ட தலைவர் ராமராஜ் மற்றும் புரவலர் செல்லமுத்து முன்னிலை வகித்தனர். கீரம்பூர் நூலகர் நூர்அஹமது வரவேற்புரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை போட்டி, ஓவிய போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பங்கு பெற்ற துறையூர் ரோட்டரி சங்க தலைவரும் புள்ளியியல் துறை துணை இயக்குனராக பணி நிறைவு பெற்ற தில்லைநாயகம் சிறப்புரையாற்றினார். முடிவில் செங்காட்டுப்பட்டி நூலகர் கார்த்திகேயன் நன்றியுரையாற்றினார்.

    Next Story
    ×