search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாத ஸுதா ரஸம் ரோகிணி நட்சத்திர இசை விழா
    X

    நாத ஸுதா ரஸம் ரோகிணி நட்சத்திர இசை விழா

    • நாத ஸுதா ரஸம் ரோகிணி நட்சத்திர இசை விழா நடக்க உள்ளது
    • நாளை மாலை 6 ணிக்கு நடக்கிறது

    திருச்சி:

    திருச்சி ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதி ஸ்ரீ முளு பாகல் மடத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு நாத ஸுதா ரஸம் சங்கீத ஆராதனை ரோகிணி நட்சத்திர இசை விழா நடைபெறுகிறது.

    இதில் வீணை இசைக் கலைஞர் சி.எஸ். ஹரிணி, மிருதங்க வித்வான் ஸ்ரேயஸ் ஸ்ரீமான், கடம்ப வித்வான் நவீன் ஆகியோர் இசை விழாவை வழங்குகிறார்கள்.

    மேலும் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் பரம்பரை மிராஸ் வீணை ஆர். ஸ்ரீநிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.இது தொடர்பாக ஸ்ரீரங்கம் நகர நல சங்க மக்கள் செய்தி தொடர்பாளர் ரோட்டேரியன் கே. சீனிவாசன் கூறும் போது, இன்னிசைக்கு மனதை ஆட்கொள்ளும் அபார ஆற்றல் இருக்கிறது.

    அந்த வகையில் ஸ்ரீ முளு பாகல் மடத்தில் நடைபெறும் இந்த ரோகி ணி நட்சத்திர இசை விழாவுக்கு வருகை தந்து இசையுடன் ரங்கநாதர் அருளையும் பெற்றுச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார். விழாவுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் சிறப்பாக செய்துள்ளனர்.

    Next Story
    ×