search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில் பெண்ணிடம் நகை பறிப்பு
    X

    திருச்சியில் பெண்ணிடம் நகை பறிப்பு

    • மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் ரேவதியின் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.
    • இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருச்சி

    புதுக்கோட்டை அன்னதானப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி ரேவதி (வயது 38). இவர்களது மகள் மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் கோவில்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார்.

    இந்த நிலையில் ரேவதி நேற்று பள்ளியில் நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்துக்கு வந்தார். பின்னர் கூட்டம் முடிந்து தனது ஊருக்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் ரேவதியின் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.

    இதுபற்றி ரேவதி அளித்த புகாரின்பேரில் வளநாடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×