என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருச்சி அருகே மனைவியின் நடத்தை சந்தேகத்தால் கணவன் தற்கொலை முயற்சி
- திருச்சி அருகே மனைவியின் நடத்தை சந்தேகத்தால் கணவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டான்
- இதுகுறித்து வாத்தலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பாச்சூர் கிராமம் குழித்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு மகன் துரைராஜ் (வயது 31). இவர் சொந்தமாக டாட்டா ஏசி வைத்து ஓட்டி வருகிறார். இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சசிகலா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் துரைராஜ் மனைவியின் நடத்தையில் சந்தேகபட்டு தொடர்ந்து சண்டை போட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த துரைராஜ் மனைவியிடம் தகறாறில் ஈடுபட்டார்.
இதில் வாக்குவாதம் முற்றவே மனமுடைந்த துரைராஜ் மண்ணெண்னையை உடல் மீது ஊற்றிக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதில் அவருக்கு 50 சதவீதம் காயம் ஏற்பட்டது. கழுத்து மற்றும் தொடை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இதுகுறித்து வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.