search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    13 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மீன்பிடி திருவிழா
    X

    13 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மீன்பிடி திருவிழா

    • மணப்பாறை அருகே 13 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மீன்பிடி திருவிழா
    • விரால், காட்லா என பல வகையான நாட்டு மீன்கள் கிடைத்தனர்

    மணப்பாறை,

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பிச்சம்பட்டியில் உள்ள பெரிய குளத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் மீன்பிடி திருவிழா இன்று நடைபெற்றது. சுமார் 13 ஆண்டுகளுக்கு இந்த மீன்பிடி திருவிழாவில் பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் மீன்பிடிக்க திரண்டனர்.

    வலை உள்ளிட்ட பல்வேறு மீன்பிடி சாதனங்களை வைத்து போட்டி போட்டுக் கொண்டு மீன்களை பிடிக்க தொடங்கினர். விரால், காட்லா என பல வகையான நாட்டு மீன்கள் பலருக்கும் சிக்கிய போதும் பெரிய அளவிலான மீன்கள் சிலருக்கு மட்டுமே கிடைத்தது.

    பலருக்கும் சிறிய அளவில் தான் மீன்கள் சிக்கியது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு மீன்கள் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் சிறிய மீன்களை பலரும் கரையில் போட்டு விடவே அந்த மீன்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை அறிந்த சிறுவர்கள் சிலர் மீண்டும் அந்த மீன்களை குளத்திலேயே எடுத்துப் போட்டது தான் அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது.

    Next Story
    ×