search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எடமலைப்பட்டி புதூர் பகுதியில்பெண்ணிடம் 2½ பவுன் செயின் பறிப்பு
    X

    எடமலைப்பட்டி புதூர் பகுதியில்பெண்ணிடம் 2½ பவுன் செயின் பறிப்பு

    • பெண்ணிடம் 2½ பவுன் செயின் பறிப்பு
    • எடமலைப்பட்டி புதூர் பகுதியில் பரபரப்பு

    திருச்சி

    திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஆர்.எம்.எஸ். காலனி விவேகானந்தர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன்.பைண்டிங் தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 56).

    இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு குழந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு கிப்ட் வாங்குவதற்காக அருகாமையில் உள்ள கடைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த 2½ பவுன் செயினை பறித்து கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து முத்துலட்சுமி எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    Next Story
    ×