search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவலர் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதி
    X

    காவலர் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதி

    • திருச்சியில் பணியின் போது உயிரிழந்த காவலர் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதி வழங்கினார்
    • திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் முன் சந்திப்பு

    கும்பகோணம், நாகை, திருவாரூரில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகள், ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்புவதற்காக திருச்சி விமான நிலையம் வந்தார். அப்போது அவர், கடந்த மாதம் 30-ந் தேதி அரிஸ்டோ மேம்பாலத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சாலை விபத்து ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தலைமைக் காவலர் ஸ்ரீதரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார். கலெக்டர் பிரதீப்குமார், மாநகர போலீஸ் கமிஷனர் காமினி ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×