என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
- காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்
- மணமக்களை மணமகளின் பெற்றோருடன் போலீஸார் அனுப்பி வைத்தனர்.
தொட்டியம்,
கரூர் தாந்தோணிமலையை சேர்ந்த ராஜகோபால் மகன் சசிகுமார் (வயது25), இவரும் காட்டுப்புத்தூர் அருகேயுள்ள மேலமஞ்சமேடு சேர்ந்த பெருமாள் மகள் ஆர்த்தி (25) என்பவரும் கரூரில் உள்ள ஒரு தனியார் டெக்ஸ்டைல்சில் பணிபுரிந்தவர்கள். இவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் இருவரும் பெத்தனூர் முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு தங்களது குடும்பத்தாரிடமிருந்து பாதுகாப்பு கேட்டு காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மணமகன் மற்றும் மணமகள் வீட்டாரை காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் மணமகன் வீட்டார் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என தெரிய வருகிறது. மேலும் மணமகனை விசாரித்ததில் மணமகளுடன் (காதலியுடன்) செல்வதாக உறுதியளித்ததன் பேரில் மணமகள் வீட்டார் சம்மதத்துடன் மணமக்களை மணமகளின் பெற்றோருடன் போலீஸார் அனுப்பி வைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்