என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கே. கே. நகரில் இரு பிரிவினரிடையே மோதல்
- கே. கே. நகரில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது
- 2 பேருக்கு அருவாள் வெட்டு
திருச்சி:
திருச்சி ஏர்போர்ட் செம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் நேற்று இரவு உடையான் பட்டி அருகே வார சந்தை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றுள்ளார். இதனை பார்த்த உடையான் பட்டி பகுதியை சேர்ந்த கதிர்வேலு என்பவர், பழனிச்சாமியின் இருசக்கர வாகனத்தை நிறுத்தி மெதுவாக செல்லும்படி கூறியிருக்கிறார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பாக மாறி உள்ளது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.
இதனைத் தொடர்ந்து ஆத்திரம் அடங்காத பழனிச்சாமி செம்பட்டு பகுதிக்கு சென்று விக்கி, கோபாலகிருஷ்ணன், பாலமுருகன், ராஜா, அண்ணாமலை, ராஜ்குமார், நாகராஜ் உள்ளிட்டோரை அழைத்துக்கொண்டு மீண்டும் உடையான் பட்டி வார சந்தைக்கு வந்து அங்கு இருப்பவர்களிடம் தகராறு செய்து ஆயுதங்களால் தாக்கி உள்ளனர்.
இதில் கோபாலகிருஷ்ணன் மற்றும் பழனிச்சாமி ஆகியோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இது குறித்து கே.கே. நகர் போலீசாருக்கு வந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்