திருச்சி மாவட்டத்தில் 96.02 சதவீதம் பேர் தேர்ச்சி

87 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனைமாநில அளவில் 13வது இடத்திற்கு வந்தது
திருச்சி மாவட்டத்தில் 96.02 சதவீதம் பேர் தேர்ச்சி
Published on

திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வை 34,392 மாணவ-மாணவிகள் எழுத விண்ணப்பித்து இருந்தனர். பின்னர் 258 பள்ளிகளைச் சேர்ந்த 14,390 மாணவர்களும், 16,520 மாணவிகளும் என மொத்தம் 30,910 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி–னார்.இதில் 13,520 மாணவர்கள், 16,159 மாணவிகள் என மொத்தம் 29,679 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 96.02 சதவீதம் ஆகும். 1,231 பேர் தேர்ச்சி பெறவில்லை. இதில் 3,482 பேர் தேர்வு எழுத வரவில்லை.திருச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்ச்சி விகிதம் 95.93 சதவீதம் ஆகும். இந்த ஆண்டு 96.02 சதவீதமாக உயர்ந்துள்ளது. .திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 258 பள்ளிகளில் 87 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. 12 அரசு பள்ளியும், 75 தனி–யார் பள்ளிகளும் அடங் கும். மாநில அளவில் தேர்ச்சி விகிதத்தில் திருச்சி மாவட்டம் 13-வது இடத்தை பிடித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com