search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    6,409 மெட்ரிக் டன் சரக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
    X

    6,409 மெட்ரிக் டன் சரக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி

    • திருச்சியில் இருந்து பயணிகள் விமானங்கள் மூலம் ஆண்டுக்கு 6,409 மெட்ரிக் டன் சரக்குகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
    • 98 சதவீதம் ஏற்றுமதி உள்ள நிலையில் இறக்குமதி 2 சதவீதம் மட்டுமே உள்ளது

    திருச்சி,

    உள்நாட்டில் உற்பத்தியா கும் பொருட்கள் வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்தால் அந்நிய செலவாணி அதிகரி த்து நாட்டின் பொருளாதா ரம் உயரும். இந்த ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்திற்கு கப்பல் மற்றும் விமானம் முக்கிய பங்காற்றி வருகிறது. அதிலும் விமான சரக்கு போக்குவரத்து விரைவான சேவையை வழங்குகிறது.கொரோனா காலகட்ட த்தில் இந்தியா உள்பட உலகம் முழுவதும் ஏற்றுமதி மிகவும் பாதிப்புக்குள்ளா னது. அதன் பின்னர் தற்போது சரக்கு ஏற்றுமதி பல நாடுகளில் சீராகியு ள்ளது.ஆனால் திருச்சிக்கு சரக்குகளை கையாள தனி விமானங்கள் இயக்கப்ப டவில்லை. தற்போது வரை பயணிகள் விமானத்தில் மட்டுமே சரக்குகள் கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.இதில் முதலில் பயணிக ளுக்கு முன்னுரிமை அளிக்கி ன்றனர். அவர்களின் உட மைகள் வைக்கும் இடத்தை தவிர்த்து மீதமுள்ள இடத்தி ற்கு தகுந்தார் போல் சரக்கு ஏற்ற அனுமதி அளிக்க ப்படுகிறது.திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர், துபாய், அபுதாபி, சார்ஜா, குவைத், மஸ்கட், தோகா, கொழும்பு உள்ளி ட்ட நாடுகளுக்கு அதிகளவு சரக்கு ஏற்றுமதி செய்யப்ப டுகிறது.

    தினமும் இங்கிருந்து 18 மெட்ரிக் டன் சரக்கு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சராசரி யாக மாதத்திற்கு 550 மெட்ரிக் டன்னும் ஆண்டு க்கு 6,409 மெட்ரிக் டன் சரக்குகளும் கையாள ப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.இதில் 98 சதவீதம் காய்கறிகள்,பழங்கள், பூக்கள், கீரை வகைகள், பால் பொருட்கள், மீன்கள் ஆகியவையாகும்.மீதி இரண்டு சதவீதம் மட்டுமே துணி வகைகள் வீட்டு உபயோக பொருட்கள் பரிசு பொருட்கள் மற்றும் புத்தகங்கள் செல்கிறது.திருச்சி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி கூறும் போது,திருச்சி விமான நிலைய த்தை பொருத்தவரை ஏற்று மதியை ஒப்பிடும்போது இறக்குமதி 2 சதவீதம் மட்டுமே உள்ளது. இதற்குப் பல்வேறு நடைமுறை சிக்க ல்கள் இருப்பதால் அவற்றை சரி செய்வதற்கு முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.ஆகவே இறக்கும தியாளர்கள் விமான சரக்கு இறக்குமதிக்கு முக்கிய த்துவம் தர வேண்டும்.அவர்களுக்கு தேவையான எல்லா ஆவணம் சார்ந்த பணிகளையும் சரக்கு முனையம் பார்த்துக் கொள்ளும் என்றார்.

    Next Story
    ×