என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில் மாணவிகள் 2 பேர் மாயம்
    X

    திருச்சியில் மாணவிகள் 2 பேர் மாயம்

    • திருச்சியில் மாணவிகள் 2 பேர் மாயமாகியுள்ளனர்.
    • திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஆர்.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் காளீஸ்வரி இவரது மகள் பவானி (வயது16) இவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

    திருச்சி

    திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஆர்.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் காளீஸ்வரி இவரது மகள் பவானி (வயது16) இவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இவர் அடிக்கடி செல்போனில் தொடர்ந்து பல மணி நேரம் பேசி வருவதை பார்த்த காளீஸ்வரி, பவானியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதனால் நேற்று முன்தினம் பேனா வாங்குவதற்காக பக்கத்தில் உள்ள கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர்கள் விட்டு திரும்பவில்லை.

    இது குறித்து எடமலைப்பட்டி புதூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல் திருச்சி பீம நகர் பஞ்சு கிடங்கு பகுதியில் வசித்து வருபவர் நசீர் பாட்ஷா (45). இவரது மகள் யாஸ்மின் ஷிபானா (வயது14). இவர் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார் நிலையில் அடையாளம் தெரியாத மர்ம நபருடன் பழக்கவழக்கம் ஏற்பட்டதால் நசீர் பாட்சா அவரை கண்டித்து கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் தேடி திரும்பவில்லை.

    இது குறித்து செசன்ஸ் நீதிமன்ற காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×