search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில் கஞ்சா, லாட்டரி விற்ற 2 பேர் கைது
    X

    திருச்சியில் கஞ்சா, லாட்டரி விற்ற 2 பேர் கைது

    • லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது
    • அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி

    திருச்சி புத்தூர் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து உறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோப்பெருஞ்சோழன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்று தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதில் லாட்டரி விற்றதாக உறையூரை சேர்ந்த ஆறுமுகம் என்ற வாலிபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்றதற்கான ஆவணங்கள் மற்றும் ரூ. 5 ஆயிரம் மற்றும் செல்போன் பறிமுதல் செய்தனர். இதேபோல் திருச்சி ஆண்டாள் வீதி பகுதியில் கஞ்சா விற்றதாக தேவேந்திரன் என்பவரை கோட்டை போலீசார் கைது செய்தனர் . அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×