search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது
    X

    திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது

    • திருச்சி ரெயில் நிைலய மைதானத்தில் போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக தில்லைநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • அவர்களிடமிருந்து 18 போதை மாத்திரைகள், ஊசி, பாட்டில் மற்றும் கஞ்சாவைபோலீசா பறிமுதல் செய்து உள்ளனர்

    திருச்சி :

    திருச்சியில் போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி மாகரில் பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி வந்தனர்.

    இதில் திருச்சி ரெயில் நிைலய மைதானத்தில் போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக தில்லைநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தில்லைநகர் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான தனிப்படையினர் அங்கு சென்று பார்த்த போது, தில்லைநகர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ராமநாத் (வயது 32), பழைய கருர் ரோடு பகுதியை சேர்ந்த ஆசிக் பாஷா (21) உப்புப்பாறையை சேர்ந்த அன்சாரி, உலகநாதன், பிரசன்னா ஆகியோர் போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்றுக்கொண்டு இருந்தனர்.

    அதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். ஆனாலும் அங்கிருந்த அன்சாரி, உலகநாதன், பிரசன்னா ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட ராமநாத், ஆசிக் பாஷா ஆகியோரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்திய போது அவர்கள் தான் போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்றது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து அவர்களிடமிருந்து 18 போதை மாத்திரைகள், ஊசி, பாட்டில் மற்றும் கஞ்சாவைபோலீசா பறிமுதல் செய்து உள்ளனர். மேலும் அவர்களுக்கு இந்த போதை மாத்திரைகள் எங்கிருந்து கிடைத்தது, யார் சப்ளை செய்கிறார்கள், நெட்ஒர்க் அமைத்து மர்ம நபர்கள் யார், இதுவரை யார், யாருக்கெல்லாம் போதை மாத்திரை விநியோகம் செய்யப்பட்டு உள்ளது என்று துருவித்துருவி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தப்பி ஓடிய மூன்று பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ராமநாத், ஆசிக் பாஷா மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    Next Story
    ×