search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
    X

    காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

    • முசிறி காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
    • இவர்களது காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு

    முசிறி,

    முசிறி அடுத்த மேல வெள்ளூர் கிராமத்தை சேர்ந்த சேகர் மகன் ஆறுமுகம்(25) கேட்டரிங் வேலை செய்து வரும் இவரும், மகேந்திரமங்கலம் பகுதியை சேர்ந்த முருகானந்தம் மகள் யோகேஸ்வரி (19) என்பவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்து உள்ளனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது, இதனால் முசிறி பகுதியில் உள்ள விநாயகர் கோவில் திருமணம் செய்து கொண்ட காதலர்கள் தங்களுக்கு போதிய பாதுகாப்பு வசதி வேண்டி முசிறி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    இது தொடர்பாக முசிறி காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சத்ய விநாயகம் தம்பதியரின் இரு விட்டாரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டதில் பெண் வீட்டார் சம்மதம் தெரிவிக்கவில்லை எனவும், மாப்பிள்ளை வீட்டார் சம்மதம் தெரிவித்ததின் பேரில் மணமக்களை மாப்பிள்ளை வீட்டாருடன் போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் முசிறி காவல் நிலையத்தில் பரபரப்பாக காணப்பட்டது.

    Next Story
    ×