என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருச்சி மாவட்டத்தில் நாளை மின்சாரம் நிறுத்தும் இடங்கள்
- வாழவந்தான் கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
- புதுக்குளம், இடையப்பட்டி, மேலபாகனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
திருச்சி:
வாழவந்தான் கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (புதன் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளன. இதையொட்டி ஜெய் நகர், திருவேங்கடநகர், கணேசபுரம்,
கணபதிநகர், கீழ குமரேசபுரம், மேலகுமரேசபுரம், கூத்தைப்பார், கிருஷ்ணசமுத்திரம், பத்தாளப்பேட்டை, கிளியூர், தமிழ்நகர், பெல் டவுன்ஷிப் சி மற்றும் டி செக்டாரில் ஒரு பகுதி, சொக்கலிங்கபுரம், இமானுவேல் நகர், வ.உ.சிநகர், எழில் நகர், அய்யம்பட்டி,
வாழவந்தான் கோட்டை, தொண்டைமான்பட்டி, திருநெடுங்குளம், வாழவந்தான்கோட்டை சிட்கோ தொழிற்பேட்டை, பெரியார்நகர், ரெட்டியார்தோட்டம், ஈச்சங்காடு, பர்மாநகர், மாங்காவனம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
இதேபோல் அம்மாபேட்டை துணை மின்நிலையத்தில் நாளை (புதன் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை ராம்ஜி நகர், கள்ளிக்குடி, அரியாவூர், சன்னாசிப்பட்டி, சத்திரப்பட்டி, அம்மாப்பேட்டை, இனாம்குளத்தூர், வெள்ளிவாடி, நவலூர்குட்டப்பட்டு,
பூலாங்குளத்துப்பட்டி, சித்தாநத்தம், ஆலம்பட்டிபுதூர், கரையான்பட்டி, வடசேரி, புதுக்குளம், இடையப்பட்டி, மேலபாகனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
இந்த தகவலை திருச்சி கிழக்கு மின்வாரிய செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.






