என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    சிறுவனின் உணவுக்குழாயில் சிக்கிய  5 ரூபாய் நாணயம் அகற்றம்-  கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை
    X

    சிறுவனின் உணவுக்குழாயில் சிக்கிய 5 ரூபாய் நாணயம் அகற்றம்- கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிறுவனின் உணவுக்குழாயில் சிக்கிய 5 ரூபாய் நாணயம் அகற்றப்பட்டது.
    • கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த பெருகோபனப்பள்ளியை சேர்ந்தவர்வீரபத்திரன். இவரது மகன் தீபக்குமார் (வயது 11).

    இவன் கடந்த மாதம் 26-ந்தே தி மதியம் தவறுதலாக 5 ரூபாய் நாணயத்தை விழுங்கி விட்டான். இதையடுத்து அவனை பெற்றோர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

    இதையடுத்து சிறுவன்தீ பக்குமாருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில்உ ணவுக்குழாயின் தொடக்கத்தில் 5 ரூபாய் நாணயம் சிக்கி இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவசரமாக அறுவை சிகிச்சை செய்து நாணயத்தை அகற்ற முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி அறுவை சிகிச்சை நிபுணர்கள் சுஜய்குமார், சபரீஷ், வினோத்குமார், மயக்கவியல் மருத்துவ நிபுணர்கள் நந்தபிரபு, சுபா, பிரவீன்குமார் தலைமையில் அதிநவீன அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு 5 ரூபாய் நாணயம் அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சையின் போது உள்நோக்கி கருவி மூலம் நாணயம் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டது. இதை தொடர்ந்து சிறுவன் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

    இது குறித்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் டீன் அசோகன் கூறியதாவது:-

    இது போன்ற அறுவை சிகிச்சைகளை தனியார் மருத்துவமனைகளில், வெளி இடங்களில்செ ய்ய ரூ.50 ஆயிரம் வரையில் செலவு ஏற்படும்.

    தமிழக அரசால் முற்றிலும்இ லவசமாக சிறப்பு வாய்ந்த காது, மூக்கு, தொண்டை பிரிவு அறுவை சிகிச்சை நிபுணர்களால், பேராசிரியர்கள், அணை பேராசிரியர்கள் மூலம் சிறந்த முறையில்இ ந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×