என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவிரி ஆற்றில் மூழ்கி திருநங்கை சாவு
    X

    காவிரி ஆற்றில் மூழ்கி பலியான திருநங்கை சந்திரிகாவை படத்தில் காணலாம்.

    காவிரி ஆற்றில் மூழ்கி திருநங்கை சாவு

    • ஊட்டமலை பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளிக்க சென்றார்.
    • மாலையில் காவிரி ஆற்றங்கரையோரம் உடல் கரை ஒதுங்கியது.

    தருமபுரி,

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோதிமங்கலம் கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன் என்கிற சந்திரிகா (வயது30). திருநங்கையான இவர் தனது நண்பர்களுடன் நேற்று சுற்றுலாவுக்காக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்தார். அப்போது சந்திரிகா காவிரி ஆற்றில் தனது நண்பர்க–ளுடன் ஊட்டமலை பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளிக்க சென்றார்.

    சிறிது நேரத்தில் அவர் ஆழமான பகுதிக்கு சென்றதால், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். உடன் வந்த நண்பர்கள் சந்திரிகா காணவில்லை என்று ஆற்றில் மூழ்கி தேடி பார்த்தனர். எங்கு தேடியும் அவரது உடல் கிடைக்க–வில்லை. மாலையில் காவிரி ஆற்றங்கரையோரம் உடல் கரைஒதுங்கியது.

    இது குறித்து தகவலறிந்த ஒகேனக்கல் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சந்திரி–காவின் உடலை மீட்டு பிரேத பரிசோத–னைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த–னர். சம்பவம் குறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×