என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்.
தோட்டக்கலைத்துறை சார்பில் பயிர்களில் வைரஸ் தாக்கத்தை தடுப்பது குறித்த பயிற்சி
- வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனரும், தோட்டக்கலைத்துறை ஆராய்ச்சி நிலைய ஆராய்ச்சியாளர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
- பாதிக்கப்பட்ட செடிகளை உடனே அப்புறப்படுத்துதல், நோய் பரப்பும் பூச்சிகளை கட்டுப்படுத்துதல், பயிர் செய்யும் முன் மண் பரிசோதனை செய்வது போன்ற பயிற்சிகளை வழங்கினர்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் தோட்டக்கலைத்துறை சார்பில் பயிர்களில் வைரஸ் தாக்கத்தை தடுப்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. வில்பட்டி கிராமத்தில் உருளைகிழங்கு சாகுபடி செய்திருந்த விவசாயிகளின் வயலை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனரும், தோட்டக்கலைத்துறை ஆராய்ச்சி நிலைய ஆராய்ச்சியாளர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது நோய் எதிர்ப்பு கொண்ட ரகங்களை பயிரிடுதல், நோய் தாக்கப்பட்ட நடவு பொருட்களை தவிர்க்க வேண்டும். பயிர் சுழற்சி முறையை பின்பற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட செடிகளை உடனே அப்புறப்படுத்துதல், நோய் பரப்பும் பூச்சிகளை கட்டுப்படுத்துதல், பயிர் செய்யும் முன் மண் பரிசோதனை செய்வது போன்ற பயிற்சிகளை வழங்கினர்.
Next Story






