இதமான சீதோசனம் தொடர் விடுமுறையால் கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

வார விடுமுறை என்பதால் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்துள்ளனர்.இரவு நேரத்தில் குளிரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளதால் கொடைக்கானலுக்கு வரும் மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகளை படத்தில் காணலாம்.
கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகளை படத்தில் காணலாம்.
Published on

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலை சுற்றிப்பார்க்க பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகளின் வருகை வருடம் முழுவதும் இருந்து கொண்டே இருக்கும். இங்கு மிதமான காலநிலையும், இயற்கை எழில் கொஞ்சும் அழகும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.

தற்போது இடை நாட்களில் பெய்த மழை குறைந்த நிலையில் மீண்டும் கடும்குளிர் தொடங்கியுள்ளது.இருப்பினும் கொடைக்கானலுக்கு நடுங்கும் குளிரிளும் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிக்கிறது. வார விடுமுறை என்பதால் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்துள்ளனர். வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை தற்போது வாடிக்கையாகி உள்ளது.

மற்ற நாட்களில் சுற்றுலாப்பயணிகளின் வருகை சற்று குறைவாகவே இருந்து வருகிறது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள். இதனால் பல இடங்களில் வாகன நெரிசல், தங்கும் விடுதிகள் நிரம்பி வழிவது, கட்டண உயர்வுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. தற்போது குளிர்காலம் என்பதால் மாலை வேளையில் வெயில் சற்று தணிந்து குளிரின் தாக்கம் தொடங்குகிறது.

பின் இரவு வேளையில் அதிகரிக்கிறது. பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் வெயில், அவ்வப்போது மேக கூட்டம் இவையெல்லாம் இதமான சூழலாக பகல் நேரத்தை மாற்றுகிறது. இரவில் தலைகீழாக நிலைமை மாறி உறைய வைக்கும் குளிர் நிலவுகிறது. இந்த குளிர் சீசன் ஜனவரி முடியும் வரை தொடரும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பகலில் இதமான வெப்பநிலையும், இரவு நேரத்தில் குளிரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளதால் கொடைக்கானலுக்கு வரும் மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com