search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2வது சீசனை அனுபவிக்க கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
    X

    கோப்பு படம்.

    2வது சீசனை அனுபவிக்க கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    • குளிர்ந்த சீதோசனம் நிலவி அவர்களை உற்சாகப்படுத்தும். தமிழகத்தில் தொடர்ந்து 3நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    • இதனால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மே மாதம்கோடை கால சீசனாகும். அப்போது பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள். அவர்களை கவரும் விதமாக கோடை விழா மலர்க்கண்காட்சி நடைபெறும்.

    அதனை தொடர்ந்து செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் ஆப் சீசன் எனப்படும் 2வது சீசன் நடைபெறும். அப்போது குளிர்ந்த சீதோசனம் நிலவி அவர்களை உற்சாகப்படுத்தும். தமிழகத்தில் தொடர்ந்து 3நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    கோக்கர்ஸ்வாக், தூண்பாறை, பைன்பாரஸ்ட், மோயர்பாயிண்ட், குணாகுகை, பிரையண்ட் பார்க், செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா, அப்சர்வேட்டரி பகுதிகளில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். மேலும் பகல் பொழுதில் இதமான வெயிலும், மாலை நேரங்களில் சாரல் மழையும் என இதமான சீதோசனத்தை அனுபவித்தனர். மேலும் மேல்மலை கிராமங்களான பூம்பாறை, குழந்தை வேலப்பர் கோவில், பழனிமலை காட்சிப்பகுதி, மன்னவனூர் எழும்பள்ளம் ஏரி, கூக்கால் உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இதனால் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனை போலீசார் சீரமைத்தனர்.

    கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பி செல்லும் பகுதியாக பேரிஜம் ஏரி விளங்குகிறது. இதற்காக வனத்துறை அலுவலகத்தில் முன்பதிவு செய்து செல்ல வேண்டும். அடர்ந்த வனப்பகுதியில் ஏரியை சுற்றி சவாரி செய்ய சுற்றுலாபயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் யானைகள் குட்டிகளுடன் அங்கு முகாமிட்டதால் கடந்த வாரம் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. யானை நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். யானைகள் பேரிஜம் ஏரிப்பகுதியிலேயே சுற்றி வருவதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை தொடர்வதாக அறிவித்துள்ளனர். இதனால் ஆர்வமுடன் சென்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். சுற்றுலா பயணிகள் வருகையால் ஓட்டல் உரிமையாளர்கள், வியாபாரிகள் மற்றும் சுற்றுலாவை நம்பியுள்ள தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    Next Story
    ×