என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒகேனக்கல் மலைபாதையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
    X

    சாலையில் கவிழ்ந்த பேருந்தை படத்தில் காணலாம்

    ஒகேனக்கல் மலைபாதையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து

    • ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்தது.
    • விபத்தில் சாலையில் கவிழ்ந்த பேருந்தை போலீசார் பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர்.

    ஒகேனக்கல்,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே ஒகேனக்கல் மலைப்பகுதியில் கணவாய் ஆஞ்சநேயர் கோவில் அருகில் இன்று காலை ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்தது. இதில் பேருந்தில் இருந்த பயணிகள் அலறினர்.

    இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து உடனே போலீசாருக்கும், தீயணைப்புத்துறை யினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உடனடியாக விபத்தில் சிக்கியவர்களை பேருந்துக்குள் இருந்து மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் படுகாயம் அடைந்த 20 பேரை மீட்டு சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒகேனக்கல் செல்லும் பிரதான சாலையில் பேருந்து கவிழ்ந்ததால் ஒகேனக்கல்லுக்கு செல்லும் போக்குவரத்து முழுமையாக தடைப்பட்டது. பேருந்து சாலையில் கவிழ்ந்ததால் சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பின்றி காயங்களுடன் உயிர் தப்பித்தனர். பள்ளத்தில் கவிழ்ந்திருந்தால் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும்.

    விபத்தில் சாலையில் கவிழ்ந்த பேருந்தை போலீசார் பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர்.

    இது குறித்து ஒகேனக்கல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×