search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொப்பூர் கட்டமேடு பகுதியில்   லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர் படுகாயம்
    X

    தொப்பூர் கட்டமேடு பகுதியில் லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர் படுகாயம்

    • டைல்ஸ் பாரம் ஏற்றி வந்த லாரி ஊருக்குலைந்தது.
    • ஓட்டுநர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    தருமபுரி,

    ஆந்திரா மாநிலத்தில் இருந்து திருப்பூருக்கு டைல்ஸ் பாரம் ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி மாவட்டம் மேல் சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த சிவராமன் மகன் காசிராம் (வயது 30) ஓட்டுநர், மற்றும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த மகராஜன் மகன் தென்னரசு (37) ஆகிய இருவரும் தொப்பூர் கட்டமேடு பகுதியில் இன்று காலை சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது கல்கத்தாவில் இருந்து ஈரோட்டிற்கு எள்ளு பாரம் ஏற்றிக்கொண்டு வந்த லாரி முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் மீது மோதியதில் பின்னால் டைல்ஸ் பாரம் ஏற்றி வந்த லாரி ஊருக்குலைந்தது.

    இந்த விபத்தில் டைல்ஸ் பாரம் ஏற்றி வந்த லாரி ஓட்டுநர் காசிராம் பலத்த காயமடைந்தார். தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீசார் காயமடைந்த ஓட்டுநரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மற்ற ஓட்டுநர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×