தேனியில் நாளை நடக்கிறது : 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா

தேனி 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நாளை(20-ந்தேதி) மாலை 4 மணியளவில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடக்கிறது.அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டு சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் வழங்கி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

தேனி:

தேனி என்.ஆர்.டி.மக்கள் மன்றத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நாளை(20-ந்தேதி) மாலை 4 மணியளவில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடக்கிறது. விழாவில் அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டு சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் வழங்கி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

விழாவில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்ப திவாளர் ஆரோக்கியகுமார் வரவேற்புரையாற்றுகிறார். மதுரை மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் ஜீவா திட்ட விளக்கஉரையாற்றுகிறார். எம்.எல்.ஏக்கள் சரவணக்கு மார், ராமகிரு ஷ்ணன், மகாராஜன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பிரீத்தா, அல்லிநகரம் நகர்மன்ற தலைவர் ரேணுபிரியா, தேனி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சக்கரவர்த்தி, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் ராஜபாண்டியன், அல்லிநகரம் நகர்மன்ற துணைத்தலைவர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் ராஜாங்கம் நன்றியுரை கூறுகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com