search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரம் மாவட்டத்தில் நாளை 207மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு: 68,244 பேர் எழுதுகின்றனர்
    X

    விழுப்புரம் மாவட்டத்தில் நாளை 207மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு: 68,244 பேர் எழுதுகின்றனர்

    • விழுப்புரம் மாவட்டத்தில் நாளை 207மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வை 68,244 பேர் எழுதுகின்றனர்.
    • விழுப்புரம், செஞ்சி, கண்டாச்சிபுரம், மரக்காணம், மேல்மலையனூர், திருவெண்ணைநல்லூர், திண்டிவனம், வானூர், விக்கிரவாண்டி ,உள்ளிட்ட 9 வட்டங்களில் தேர்வு நடக்கிறது.

    விழுப்புரம்:

    டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறையை கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி முடிவடைந்தது. குரூப் 4 தேர்வுக்கு இதுவரை சுமார் 21.85 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அந்த தகவலின்படி, ஆண் விண்ணப்பதா ரர்கள் சுமார் 9,26,583 பேரும், பெண் விண்ண ப்பதாரர் 12,58,616 பேரும், 129 பேர் மூன்றாம் பாலினத்தவர்களும் அடங்குவார்கள். விழுப்பு ரம்மாவட்டத்தில் 207தேர்வு மையங்களில் 68244 பேர் நாளை தேர்வு எழுத உள்ளனர் விழுப்புரம் மாவட்டத்தில் 9 வட்டங்களில் தேர்வு நடைபெற உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    விழுப்புரம், செஞ்சி, கண்டாச்சிபுரம், மரக்காணம், மேல்மலையனூர், திருவெண்ணைநல்லூர், திண்டிவனம், வானூர், விக்கிரவாண்டி ,உள்ளிட்ட 9 வட்டங்களில் தேர்வு நடக்கிறது. தேர்வுக்கான ஏற்பாடுகளை விழுப்புரம் மாவட்டவருவாய் அலுவலரும் மாவட்ட ஆட்சியரும் பொறுப்பு பரமேஸ்வரிசெய்து வருகிறார்,தேர்வு மையங்களுக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் ஒன்றியம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது.

    Next Story
    ×