search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இன்று கடைசி பரீட்சை: தந்தை இறந்த சோகத்திலும் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி
    X

    இன்று கடைசி பரீட்சை: தந்தை இறந்த சோகத்திலும் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி

    • படிக்கும் சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் ஜெயலட்சுமிக்கு ஆறுதல் கூறினர்.
    • தந்தை இறந்த சோகத்திலும் அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில் மாணவி தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர், பெரியமேட்டுப் பாளையம் 1-வது தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (வயது57). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பவானி.

    இவர்களது மகள்கள் பொற்செல்வி, ஜெயலட்சமி. இவர்களில் பொற்செல்வி தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். ஜெயலட்சமி காலடிப்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறார்.

    மூர்த்தி தனது மகள் ஜெயலட்சுமியிடம், படித்தால்தான் வாழ்க்கை யில் முன்னேற முடியும், எந்த சூழ்நிலையிலும் படிப்பை விடக்கூடாது என்று அடிக்கடி கூறி வந்தார். தற்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இன்று கடைசி தேர்வு என்பதால் ஜெயலட்சுமி தேர்வுக்கு தயாராகி வந்தார்.

    இந்நிலையில் மூர்த்திக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதில் அவர் இறந்து போனார். இதனால் கடைசி தேர்வு எழுத தயாரான ஜெயலட்சுமி நிலைகுலைந்தார். தந்தை இறந்த துக்கத்தில் எப்படி தேர்வு எழுத செல்வது என்று கலங்கினார்.

    எனினும் தந்தையின் கல்வி ஆசையை நிறைவேற்றும் வகையில் இன்று காலை ஜெயலட்சுமி துக்கத்திலும் கடைசி தேர்வை எழுத பள்ளிக்கு சென்றார். இதுபற்றி அறிந்ததும் அவருடன் படிக்கும் சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் ஜெயலட்சுமிக்கு ஆறுதல் கூறினர். பின்னர் ஜெயலட்சுமி தனது கடைசி பரீட்சையை எழுதினார்.

    இதுபற்றி அவர் கூறும்போது, எனது தந்தை எப்போதும் படிப்பில் கவனம் செலுத்தும்படி கூறுவார். அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில் தேர்வு எழுதினேன் என்றார். இன்று மாலை மூர்த்தியின் இறுதி சடங்கு நடைபெறு கிறது. தந்தை இறந்த சோகத்திலும் அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில் மாணவி தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×