என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்திய முதல்- அமைச்சருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்-அமைச்சர் காந்தி பேச்சு
    X

    கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர் காந்தி தங்க மோதிரம் அணிவித்தார். அருகில் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. மற்றும் கட்சியினர் உள்ளனர். 

    எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்திய முதல்- அமைச்சருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்-அமைச்சர் காந்தி பேச்சு

    • மக்களுக்கான திட்டங்களை வழங்கும் அவருக்கு பொதுமக்கள் என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
    • வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் நகர தி.மு.க., சார்பில், தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 -வது பிறந்த நாளை முன்னிட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் கடந்த 1-ந் பிறந்த 30 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.

    இதற்கு நகராட்சி தலைவர் பரிதா நவாப் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான மதியழகன் முன்னிலை வகித்தார். தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை வழங்கினார்.

    தொடர்ந்து இரவு கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகில் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மு.க. ஸ்டாலின் 70 -வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.

    இதற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர செயலாளர் நவாப் வரவேற்றார். இதில் மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் நெல்லிக்குப்பம் புகழேந்தி சிறப்புரையாற்றினார்.

    இதில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி ஆகியோர் கலந்து கொண்டு 2 ஆயிரம் பேருக்கு தையல் எந்திரம், சேலை, பாத்திரங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-

    தமிழக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அவர் ஆட்சியில் பதவி ஏற்ற போது கொரோனா அதிகமாக இருந்தது. கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தார். மக்களுக்காக இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காக்கும் திட்டம் என எண்ணற்ற திட்டங்களை தந்தார்.

    பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் வழியில் சிறப்பான ஒரு ஆட்சியை தந்து வருகிறார். மக்களுக்கான திட்டங்களை வழங்கும் அவருக்கு பொதுமக்கள் என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்ட அவைத் தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம் வெங்கடேசன், பொதுக்ழுழு உறுப்பினர் அஸ்லம், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், தனசேகரன், தேங்காய் சுப்பிரமணி, மகேந்திரன், ராஜேந்திரன், சாந்தமூர்த்தி, அறிஞர், பேரூர் செயலாளர் பாபு, நகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×