என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆம்னிவேனில் கடைகளுக்கு  குட்கா சப்ளை செய்தவர் சிக்கினார்
    X

    ஆம்னிவேனில் கடைகளுக்கு குட்கா சப்ளை செய்தவர் சிக்கினார்

    • போலீசார் அந்த வழியாக வந்த ஒரு ஆம்னி வேனை சோதனை செய்தனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி பகுதியில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அந்த வழியாக வந்த ஒரு ஆம்னி வேனை சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்த டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் காவேரிப்பட்டணம் அடுத்துள்ள மலையாண்டஅள்ளியை சேர்ந்த ராஜ்குமார் (38) என்பது தெரியவந்தது. இவர் நாகரசம்பட்டி, வேலம்பட்டி பகுதிகளில் கடைகளுக்கு குட்கா சப்ளை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர். கைதான அவரை போச்சம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×