என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மாநில கல்வி கொள்கையை வகுப்பதற்கான உயர்மட்ட குழுவிற்கு கருத்துக்களை அனுப்ப கருத்து கேட்பு கூட்டம் -கிருஷ்ணகிரியில் 26-ந் தேதி நடக்கிறது
- கருத்து கேட்பு கூட்டம் கிருஷ்ணகிரியில் வருகிற 26-ந் தேதி நடக்கிறது.
- கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
கிருஷ்ணகிரி,
மாநில கல்வி கொள்கையை வகுப்ப தற்காக அமைக்கப்பட்டுள்ள உயர் மட்ட குழுவிற்கு கருத்துக்களை அனுப்பு வதற்கு கருத்து கேட்பு கூட்டம் கிருஷ்ணகிரியில் வருகிற 26-ந் தேதி நடக்கிறது.
இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் மாநிலத்திற்கு என தனித்துவமான மாநில கல்விக் கொள்கையை வகுப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் உயர் மட்ட குழு தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது.அந்த குழுவிற்கு கருத்துக்களை அனுப்பும் பொருட்டு கருத்து கேட்பு கூட்டம் வருகிற 26-ந் தேதி (புதன்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
அந்த கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை எழுத்து பூர்வமாக தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்