search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு
    X

    குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு

    • கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ந்தேதி தேர்வு நடைபெற்றது.
    • 55 ஆயிரம் பேர் தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்தனர்.

    டி.என்.பி.எஸ்.சி. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ந்தேதி குரூப் 2 முதன்மை தேர்வை நடத்தியது. ஆனால், முடிவு வெளியிடப்படாமல் இருந்தது. இதனால் முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

    இதனால் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதன்படி குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் ஒருநாள் முன்னதாக இன்று குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 10 1/2 மாதங்கள் கழித்து முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

    தேர்வு நடத்தப்பட்டபோது 5486 இடங்களுக்கு 55 ஆயிரம் பேர் தேர்வு எழுந்தியிருந்தனர். தற்போது காலிபணியிடங்கள் 6157 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2022-ம் ஆண்டு மே மாதம் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல் நிலை தேர்வு நடைபெற்றது.

    Next Story
    ×