என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாலம் கட்டும் பள்ளத்தில் விழுந்து தொழிலாளி சாவு
- மனைவி, 2 மகள்கள் உள்ளனர்
- போலீசார் விசாரணை
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூர் அடுத்த கார்ணாம்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (வயது 40). தொழிலாளி. இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும் 2 மக ள்களும் உள்ளனர்.
கனகராஜ் உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக பைக்கில் கார்ணாம் பூண்டி கிராமத்தில் இருந்து களஸ்தம்பாடி கிராமத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.
கழிக்குளம் கிராமத்தில் உள்ள ஏரிகரை பகுதியில் அருகே வரும்போது சாலையின் நடுவே பாலம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டி இருந்தனர். இதனை கவனிக்காத கனகராஜ் அதில் நிலை தடுமாறி பாலம் கட்டும் பள்ளத்தில் விழுந்தார்.
கனகராஜன் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். படுகாயம் அடைந்த பள்ளத்தில் விழுந்து கிடந்த கனகராஜை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கனகராஜன் உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.






