என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
    X

    தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

    • மரத்தில் பிணமாக தொங்கினார்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    செய்யாறு அனப்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காமராஜ் (வயது 30). தொழிலாளி. இவரது மனைவி ராதா, இவர்களுக்கு மோனிஷ்கா என்ற மகள் உள்ளார்.

    இந்த நிலையில் செய்யாறு சாலையில் தெள்ளூர் மலை கிராமம் அருகே காமராஜ் கருவேல மரத்தில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார்.

    இன்று காலை அந்த வழியாக ஆடு மேய்ப்பவர்கள் மரத்தில் தொங்கிய நிலையில் கிடந்த உடலை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் இது குறித்து வந்தவாசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காமராஜ் உடலை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து காமராஜ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×