என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு
- சாலையின் குறுக்கே வந்த நாய் மீது பைக் மோதி விபத்து
- கன்னியாகுமரியை சேர்ந்தவர்
வந்தவாசி:
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் வட்டத்துக்குட்பட்ட கல்லக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் துரை போவாஸ் . இவரது மனைவி அஜந்தா (வயது 48). இவர் வந்தவாசியில் உள்ள தனது மகள் கிரேஸ்லினை பார்க்க கன்னியாகுமரியில் இருந்து பஸ்சில் மேல்மருவத்தூருக்கு நேற்று முன்தினம் காலை வந்தார். அவரை அங்கிருந்து மருமகன் ரமேஷ் மோட்டார்சைக்கிளில் அழைத்துக் கொண்டு வந்தவாசிக்கு வந்து கொண்டிருந்தார்.
வந்தவாசி-மேல்மருவத்தூர் சாலையில், சாலவேடு கிராமம் அருகே செல்லும்போது சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் அஜந்தா நிலைத்தடு மாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.
இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து துரை போவாஸ் அளித்த புகாரின் பேரில் கீழ்கொடுங்காலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்