என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பைக் மோதி பெண் சாவு
- ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு திரும்பிய போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
வேட்டவலம்:
வேட்டவலம் அடுத்த சின்ன ஓலைப்பாடி பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 59), தொழி லாளி. இவரது மனைவி ரேவதி (45). இவர்களது பேரன் தயாநிதி.
ரேவதிக்கும், தயாநிதி க்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களை ஏழுமலை மோட் டார் சைக்கிளில் ஆவூர் கிராமத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
சிகிச்சை முடிந்து சின்ன ஓலைப்பாடி கிராமத்திற்கு திரும்பினர். சின்ன ஓலைப்பாடி கூட்ரோடு வளைவில் திரும் பிய போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் திடீரென ஏழுமலை ஒட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி யது. இதில் ஏழுமலை, ரேவதி, தயாநிதி ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் ரேவதி பலத்த காயமடைந்து சம்பவ இடத் திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்த வேட்டவலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்