search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரவலான மழை
    X

    செய்யாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தண்டரை அணைக்கட்டில் உபரி நீர் வெளியேறும் காட்சி.

    பரவலான மழை

    • செய்யாறு தண்டரை அணைக்கட்டு நிரம்பி வழிகிறது
    • விவசாயிகள் மகிழ்ச்சி

    செய்யாறு:

    செய்யாறு பகுதியில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    ெசய்யாற்றின் கிளை நதிகளான ஆரணி கமண்டல நாக நதி, கிளியாறு போன்ற ஆறுகள் மூலம் ஏற்பட்ட மழை நீர் செய்யாற்றில் கலந்து நீர்வரத்து செய்யாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தண்டரை அணைக்கட்டு வழிந்தோடுகிறது.

    தண்டரை அணைக்கட்டில் இருந்து மாவட்டத்திலேயே மிகப்பெரிய ஏரியான மாமண்டூர் ஏரிக்கு கால்வாய் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    இதனால் 16 ஏரிகள் நீர் நிரம்புவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×