என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ெநல், கரும்புக்கு அரசு உரிய விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்
    X

    ெநல், கரும்புக்கு அரசு உரிய விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்

    • மிக குறைந்த அளவில் கொள்முதல் செய்வதாக புகார்
    • விவசாய சங்க மாநில தலைவர் பேச்சு

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தனியார் மண்டபத்தில் நடைபெற்ற விவசாய கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு உழவர் பெருந்தலைவர் நாராணசாமி நாயுடுவின் விவசாய சங்க மாநில தலைவர் வேலுச்சாமி பங்கேற்றார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் வேலுச்சாமி பேசியதாவது:-

    நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எந்த வசதிகளும் இல்லாமல் விவசாயிகள் நேரடியாக கொண்டு சென்ற நெல் மூட்டைகள் தரையில் வைக்கபட்டு பாதுகாப்பின்றி வைக்கபட்டுள்ளன விவசாயி களின் நெல்மணிகள் மழைகளிலும் பனியிலும் நனைய வேண்டிய சூழ்நிலை உள்ளன.

    இதனை போக்க வேளாண் சேமிப்பு கிடங்கு 2023-24ம் ஆண்டு நிதியாண்டில் நிதி ஓதுக்கி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். மேலும் மஞ்சள் சேமிப்பு கிடங்கு ஆங்காங்கே உருவாக்கி மஞ்சள் உற்பத்தியை தமிழக அரசே கொள்முதல் செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்றும் கரும்பு, நெல், பால் விலை மிக குறைந்த அளவில் கொள்முதல் செய்கின்றனர்.

    இதனை தமிழக அரசு உரிய விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் வருகின்ற வேளாண் பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்தால் விவசாயிகள் வாழ்வில் வளம் பெருவதாக வருகின்ற பட்ஜெட்டை ஆவலுடன் விவசாயிகள் எதிர்நோக்கியுள்ளதாக அவர் பேசினார்.

    Next Story
    ×