என் மலர்
உள்ளூர் செய்திகள்

கீழ்பென்னாத்தூரில் வருகை தந்த திருக்குடைகளுக்கு வரவேற்பு
- தீப திருவிழா முன்னிட்டு நடந்தது
- ஏராளமானோர் கலந்துகொண்டனர்
கீழ்பென்னாத்தூர்:
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தீப திருவிழா நாட்களின் போது, சென்னையை சார்ந்த இந்து ஆன்மிக சேவா ஸ்மிதி டிரஸ்ட் (தமிழ்நாடு) சிவனடியார்கள் குழுவினர்கள் திருக்குடைகளை ஆண்டுதோறும் வழங்கிவருகின்றனர்.
அதன்படி இந்த ஆண்டும் திருக்குடைகள் வழங்கிட சிவனடியார்கள் கீழ்பென்னாத்தூர் வழியாக வந்தனர். அவர்களுக்கு, கீழ்பென்னாத்தூர் ஸ்ரீ மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோவில் சார்பில், ஸ்ரீமீனாட்சிசுந்தரேஸ்வர் சேவா சங்க நிர்வாகிகள் மற்றும் சிவபக்தர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
சிவன் கோவிலில் திருக்குடைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, குடைக்குழு சிவனடியார்களை திருவண்ணாமலை கோவிலுக்கு வழி அனுப்பிவைத்தனர்.
நிகழ்ச்சியில், சிவபக்தர்கள் குமார் (எ) கிருஷ்ணராஜ், ரமேஷ் பாண்டியன், விஜயகுமார், சண்முகம், சதீஷ், ரவிக்குமார், முத்துகுமரன், முத்தழகர், ராஜகோபால் மற்றும் சிவபக்தர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.






