என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலைக்கு 29-ந்தேதி உதயநிதி ஸ்டாலின் வருகை
    X

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் தரணிவேந்தன் பேசிய காட்சி.

    திருவண்ணாமலைக்கு 29-ந்தேதி உதயநிதி ஸ்டாலின் வருகை

    • பிரம்மாண்டமாக வரவேற்க ஆரணி தி.மு.க. முடிவு
    • ஆரணி அரசு விருந்தினர் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடந்தது

    ஆரணி அரசு விருந்தினர் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடந்ததுஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அரசு விருந்தினர் மாளிகையில் தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் தரணி வேந்தன் தலைமை தாங்கினார்.

    வருகின்ற 29-ந் தேதி திருவண்ணாமலையில் நடைபெற உள்ளாட்சி மாநாடு, இளைஞர் பாசறை கூட்டம், மூத்த கட்சியினருக்கு பொற்கொழி கொடுத்தல் ஆகிய நிகழ்ச்சிக்கு தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வருகிறார்.

    அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்.

    இளைஞர் அணியினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும் பொற்கொழி வாங்கும் மூத்த கட்சியினரை பாதுகாப்பாக அழைத்து வரவேண்டும் மாவட்ட செயலாளர் தணி வேந்தன் என்று அறிவுறுத்தினார்

    இந்த நிகழ்ச்சியில் நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தயாநிதி, சிவானந்தம், மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், சுந்தர், மோகன், துரை.மாமது, மேற்கு ஆரணி சேர்மன் பச்சையம்மாள் சீனிவாசன், திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    Next Story
    ×