என் மலர்
உள்ளூர் செய்திகள்

விநாயகர், மாரியம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு விழா
- முலவர்களுக்கு மகாதீப ஆராதனை நடந்தது
- பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
செங்கம்:
செங்கம் அருகே உள்ள தாழையுத்து கிராமத்தில் விநாயகர் மற்றும் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று தொடர்ந்து 48 நாள் மண்டல அபிஷேகம் நடைபெற்று வந்தது.
நேற்று 48 வது நாள் மண்டல அபிஷேகம் நிறைவு நாளை முன்னிட்டு பொதுமக்கள் சார்பில் 108 பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து கோவிலில் சூலம் வடிவில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. விநாயகர் மற்றும் மாரியம்மன் முலவர்களுக்கு பாலாபிஷேகம் செய்து வண்ண மலர்களால் அலங்கரித்து மகாதீப ஆராதனை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து பக்தர்களுக்கும் பொது மக்களுக்கும் அன்னதானம் விழா குழுவின் சார்பாக வழங்கப்பட்டது.
Next Story