என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    100 ஏக்கர் நிலத்தை அருணாசலேஸ்வரர் பார்வையிடும் வைபவம்
    X

    கலசப்பாக்கம் அடுத்த தனகோட்டிபுரம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தை அண்ணாமலையார் பார்வையிடும் நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம்.

    100 ஏக்கர் நிலத்தை அருணாசலேஸ்வரர் பார்வையிடும் வைபவம்

    • கலசப்பாக்கம் அருகே அண்ணாமலையார் கோவிலுக்கு சொந்தமான இடம்
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு

    திருவண்ணாமலை:

    சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகரும் காலமான உத்திராயணம் காலம் இன்று ரதசப்தமி முன்னிட்டு கலசப்பாக்கம் செய்யாற்றில் தீர்த்தவாரி நடைபெற உள்ளன.

    விழாவில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கலந்து கொண்டு செய்யாற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    இன்று அதிகாலை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் உண்ணாமலை உடனுறை அண்ணாமலையார் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி டிராக்டர் மூலம் சாலை வழியாக திருவண்ணாமலை இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கலசப்பாக்கம் செய்யாற்றுக்கு சென்றார்.

    அப்போது அண்ணாமலையார் கோவிலுக்கு சொந்தமான 100 ஏக்கர் விவசாய நிலத்தை கலசப்பாக்கம் அருகே உள்ள தனகோட்டிபுரம் கிராமத்தில் நேரடியாக சென்று பார்வையிடும் வைபவம் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அண்ணாமலையார் கோவிலுக்கு சொந்தமாக உள்ள நிலத்தில் விளைந்த நெற்கதிர்களை சாமிக்கு மாலையாக அணிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் பொங்கல் வைத்து சாமிக்கு படையல் இட்டு வணங்கினார்கள்.

    இதனைத் தொடர்ந்து கலசப்பாக்கம் செய்யாற்றுக்கு சாமி புறப்பாடு நடந்தது. அப்போது அவருக்கு வழி முழுவதும் பக்தர்கள் வரவேற்பு அளித்து தீபாரதனை செய்தனர்.

    கலசப்பாக்கம் செய்யாற்றின் தெற்கு கரையில் அமைந்துள்ள தென்பள்ளிப்பட்டு வழியாக ஆற்றில் இறங்குகிறார்.

    அதேபோல் இவ்விழாவில் கலசப்பாக்கம் திரிபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் செய்யாற்றின் வடகறையில் இருந்து ஆற்றில் இறங்கி இரண்டு சாமிகளும் நேருக்கு நேராக ஆனந்த நடன நிகழ்ச்சி நடக்கிறது.

    தென்கிழக்கு மூலையில் ஒன்று சேர்ந்து சூரிய பகவானுக்கு காட்சி கொடுத்துவிட்டு ஆற்றில் நடுவில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    தொடர்ந்து தீர்த்தவாரி நடைபெறுகிறது.

    Next Story
    ×