என் மலர்
உள்ளூர் செய்திகள்

எஸ் தாங்கல் கோவிலில் திருவாசகம் முற்றோதல்
- பாழடைந்த கோவிலை சரிசெய்ய நடந்தது
- சிவனடியார்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கண்ணமங்கலம்:
கணணமங்கலம் அருகே உள்ள 5 புத்தூர் கிராமத்தில் எஸ் தாங்கல் கவுரியம்மன் சமேத மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் பாழடைந்த நிலையில் உள்ளது.
இதனை விரைவில் சீரமைக்கவும், கும்பாபிஷேகம் நடத்த வேண்டியும் அண்டர் நாயகர் தொண்டர்கள் கூட்டம் சார்பில் மாணிக்கவாசகர் திருவீதி உலாவுடன், திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது.
இதில் திருவாதவூர் திருக்கூட்டம், தேவிகாபுரம் பொன்மலைநாதர் திருவாசக முற்றோதல் குழுவினர் கலந்து கொண்டனர். பகலில் அன்னதானம், மாலையில் திருவருட்பிரசாதமும வழங்கப்பட்டது.
இதில் ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.
Next Story






