என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெண்ணிடம் ரூ.70 ஆயிரம் பறித்த வாலிபர்
- ஏ.டி.எம். கார்டை மாற்றி துணிகரம்
- கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள 5புத்தூர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் அஞ்சலிதேவி (வயது 59). இவர், ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க வந்துள்ளார். பணம் எடுக்க தெரியாததால், ஏ.டி.எம். மையத் துக்கு வந்த வாலிபரிடம் பணம் எடுக்க சொல்லி ஏ.டி.எம். கார்டை கொடுத்துள்ளார்.
அந்த வாலிபர் ஏ.டி.எம்.மில் இருந்து பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, அவர் வைத்திருந்த மற்றொரு ஏ.டி.எம். கார்டை அஞ்சலிதேவியிடம் கொடுத்துள்ளார்.
இதனை கவனிக்காத அவர் அந்த கார்டை வாங்கிக்கொண்டு வந்து விட்டார்.
பின்னர் அஞ்சலிதேவியின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். வந்துள்ளது. அதில், அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.70 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது என வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அஞ்சலிதேவி தான் வைத்திருந்த ஏ.டி. எம். கார்டுடன் கண்ணமங்கலம் பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்று கிளை மேலாளரிடம் இதுபற்றி தெரிவித்தார். அப் போது அவர் வைத்திருந்தது உங்களுடைய ஏ.டி.எம். கார்டு இல்லை என வங்கி மேலாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கண்ணமங்கலம் போலீசார் "ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர்.